திருவாரூர், செப். 11 –
தமிழ்நாட்டில் சாதிவெறியின் காரணமாக நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி குடவாசலில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இப்பொதுக் கூட்டத்திற்கு சித்தாடி ராஜா தலைமையேற்க, தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிஃப், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் பசும்பொன் பாண்டியன் ஆகியோர் எழுச்சி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்விற்கு முன்னதாக சிறுகை சுரேஷ் வரவேற்புரையாற்றிட, நன்றிவுரையினை ரேடியோ வெங்கடேசன் நிகழ்த்தினார். மேலும் இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.