காஞ்சிபுரம் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு வந்த அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு செல்லாமல் புறக்கணித்து சென்றது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை எழுப்பிவுள்ளது.

காஞ்சிபுரம் , செப் . 25 –

உள்ளாட்சி தேர்தலுக்காக காஞ்சிபுரம் வந்த எடபாடி பழனிசாமி அண்ணா நினைவு இல்லத்தை புறக்கணித்து சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. அண்ணா உருவம் வைத்தும் அண்ணா பெயரை வைத்தும் கட்சி நடத்தும் அதிமுக தமிழக எதிர் கட்சி தலைவராக முதல் முறையாக பொருப்பேற்று காஞ்சிபுரம் வருகை தந்து ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்

தமிழக சட்டமன்ற எதிர் கட்சித் தலைவராக பொருப்பேற்று முதல் முறையாக காஞ்சிபுரம் வந்த எதிர் கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்க்கு செல்லாமல் கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்துவிட்டு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வந்த எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவு இல்லத்லை புறக்கணித்து சென்றதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here