மயிலாடுதுறை, மே. 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இரண்டு ரவுடிகள் இரவு நேரத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அரசத்அலி(27)மற்றும் அதே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மொட்ட சிவா(32) ஆகிய இருவரும் நண்பர்கள். இருவர் மீதும் கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் ரௌடிகள் பட்டியலில் இருவர் பெயரும் உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கொள்ளிடம் தோப்பு தெருவை சேர்ந்த ரவுடி சுமன்ராஜ்(22)கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசத்அலி மற்றும் மொட்டசிவா ஆகிய இருவரும் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மாங்கனாம்பட்டு மெயின் ரோட்டில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

பின்னர் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.அப்போது அரசத்அலி அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் மொட்டசிவாவை வெட்டினார் இதில் இடது காது பகுதி கை மற்றும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்ட மொட்ட சிவா 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு  ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரவுடி அரசத் அலியை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து நண்பர்களாக இருந்து பழகி வந்த இரண்டு ரவுடிகளும் ஏன் எதற்காக தாக்கிக் கொண்டார்கள் என்பது குறித்து போலீசார் பலகோணங்களில் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.

கொள்ளிடம் மாங்கனாம்பட்டில் இரண்டு ரவுடிகள் நேருக்கு நேர் இரவு நேரத்தில் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தில் தாக்குதலில் படுகாயமடைந்த ரவுடி மொட்ட சிவா மற்றும் தாக்கிய ரவுடி அசரத் அலி ஆவார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here