பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தவாறு  மாற்றியமைக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,ஜூலை 29

இந்திய பிரதமர் மோடிக்கும், மற்றும் ஒன்றிய வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ளக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அதில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்ப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில் உயர்ந்தப்பட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முன்பு இருந்தபடி 49.49.2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளார்.

வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒரு முறைக்கும் மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலை நோக்குப் பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தினைத் தமிழ்நாடு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளில் காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும் மானவாரிப் பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயிப்பதால் 2016-17 ல் ரூ. 566 கோடியாக இருந்த மாநில அரசின் பங்கு 2020-21 ல் 1918 கோடி ரூபாயாக அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து வரும் நிலையில் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கிவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில் உயர்ந்தப் பட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு காப்பீட்டு கட்டணத்தில் ஒன்றிய அரசு மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49; 49;2 என்ற விகித த்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என அக்கடிதத்தில் ஒன்றிய அரசை வழியுறுத்தி எழுதியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here