சென்னை, டிச. 22 –

சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை வரி ஏய்ப்பு செய்ததாகவும், முறையாக வருவாய் காட்ட வில்லை என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்தது.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய பகுதியாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கொட்டிவாக்கம், நேரு நகரில் உள்ள தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் 6 வாகனத்தில் வந்த சுமார் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விடிய விடிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 9 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால் மொபைல் விற்பனை செய்ய அனுமதிக்காததால் புதிய செல்போன் வாங்க வரும் வடிக்கையாளர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here