திருவாரூர், டிச. 05 –
காரைக்கால் மாவட்டம் டிஆர் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அழகரசன். இவர் தனது குடும்பத்தினர்களோடு இன்று நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள எமதர்மர் கோயிலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும் போது நன்னிலம் அருகே சிகார் பாளையம் என்னுமிடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்தது.
இவ்விபத்துக்குள்ளான காரில் அழகரசன், ரேவதி, இளமதி, சிராஷினி, ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்தனர். இந்நிலையில் இவ்விபத்தில் இவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர்தப்பினர்.
இச்சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வாய்க்காலில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது போன்ற தொடரும் கார் விபத்துக்கள் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக நடப்பதால் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் மேலும் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சாலை ஓரங்களில் தடுப்பு அமைத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.