காஞ்சிபுரம், ஏப். 25 –

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக காஞ்சிபுரம் மண்டல நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அழிக்க நினைக்கும் வகையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேலும் பாலாற்றில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் பயன் பெறும் வகையில் அமைத்திட வேண்டும், மற்றும் காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here