கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், மாவட்டச் சேர்மன் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவக்குமார், துணை சேர்மன் மாலதி குணசேகரன் ஆணையாளர் வாசுதேவன் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் அதனைத்தொடர்ந்து  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி  ஒன்றியத்தில் உள்ள 12 ஊராட்சிகளுக்கு

ஊராட்சி மன்ற தலைவர்களிடம்  ஆழ்துளை கிணறு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கு பெற்ற சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஒன்றியத்தில் அடங்கிய 12 ஊராட்சிகளுக்கு மின் மோட்டார்களை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும்12 ஊராட்சி மன்ற தலைவர்களும்  பொதுமக்களும் பலர் கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here