திருவேற்காடு, ஜூன். 05 –

அயனம்பாக்கம் ஆறாவது வார்டு திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஏழை எளியோர்க்கு போதும் என்று சொல்லும் சுவைமிகு பிரியாணி வழங்கப்பட்டது.

திருவேற்காடு நகராட்சி ஆறாவது வார்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் 99 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு திமுக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகர அடங்கிய அயனம்பாக்கம் ஆறாவது வார்டு வட்டக் கழகச் செயலாளர் தெய்வசிகாமணி ஏற்பாட்டில் வானகரம் அம்பத்தூர் சாலை சங்கர் சீலிங் தொழிற்சாலை அருகில் நடைப்பெற்ற இவ்விழாவில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் என் இ ஈகே மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கழகக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் வட்டக் கழக செயலாளர் தெய்வசிகாமணி பொதுமக்களிடையே அப்பகுதியில் விரைவில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்  சாலை மற்றும் பல்வேறு நலப்பணிகள் குறித்து பொது மக்களிடையே எடுத்துரைத்து, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் 99 வது பிறந்தநாள் முன்னிட்டு இந்தப் பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அதற்குண்டான மனுவினை நகர மன்றத்தில் வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜே. பவுல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறுப்பாளர் ஜேக்கப் ஆறாவது வார்டு நரமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி சிவகுமார் கழக முன்னோடிகள் ஜோப் ராஜாராம் ராமன் லஷ்மணன் தாமு மற்றும் நகர வட்ட கழக பொறுப்பாளர்கள் விஜயசாரதி சம்பத் வெங்கடேசன் கோபிநாத் இளங்கோவன் புஷ்பநாதன் கார்த்திக் ராமு சத்தியநாதன் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here