திருவள்ளூர் செப் 18 : 

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

பேரணியை  திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் திருவள்ளூர் ஒன்றிய குழு துணை தலைவர் பார்க்கத்துல்லா கான்,  திமுகவின் திருவள்ளூர் மத்திய பொறுப்பு குழு உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெயபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், மேலாளர் சேகர், ஈக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லாசனா சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here