ஆவடி அருகே 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கார வள்ளி நாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது
ஆவடி அடுத்த கோவில்பதகையில் பாரதி நகரில் அமைந்துள்ள உள்ள அருள்மிகு சிங்கார வல்லிநாயகி உடனமர் அருள் நிறை சிங்கபுரி ஈஸ்வரர் ஆலயம் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இக் கோவிலில் விநாயகர் முருகப் பெருமான் முருகப் பெருமானின் பக்தரான இடும்பன் பைரவர் சனீஸ்வரர் துர்காதேவி தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு 7 நாள் ஹோமம் வளர்க்க செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த கும்பாபிஷேகத்தை திருவாசக சித்தர் தாமோதரன் மற்றும் சிவதொண்டன் மூர்த்தி ஐயர்அவர்கள் நடத்தி வைத்தனர் இந் நிகழ்ச்சியில் ஆவடி பூந்தமல்லி வீராபுரம் கோவில்பதாகை வெள்ளானூர் திருநின்றவூர் பட்டாபிராம் ரெட்டில்ஸ் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 5 ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர் இந் நிகழ்ச்சியில் நிறைவடைந்து பஜனைகளும் இன்று மாலை திருக் கல்யாணமும் நடை பெறுகிறது