பொன்னேரி, டிச. 06 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனைத்துக் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மீஞ்சூரில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அபுபக்கர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும், திமுக சார்பில் நகர செயலாளர் தமிழ் உதயன் தலைமையிலும், புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பொன்னேரி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையிலும், திமுக நகரச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் நகராட்சியின் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன். உள்ளிட்டவர்களின் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைப் போன்று காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் ராஜா
தலைமையிலும், புரட்சிபாரதம் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் ராஜா தலைமையிலும், இந்தியகுடியரசு கட்சியின் சார்பில் சோலைகுமார் தலைமையிலும், பொன்னேரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் அமரகவி தலைமையிலும், இன்னும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை தங்களின் நிர்வாகிகளுடன் ஒன்றுகூடி கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக வலம் வந்து உறுதி மொழியேற்புடன் இந்நாளை அணுசரித்தனர்.