திருவாரூர், மே. 30 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி அடுத்த கொத்தங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி 55 வயதுடைய வேம்பு ஆவார்.
இவர் அகரமேடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்து வருவது வழக்கம். அதன்படி இன்று வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அருந்து. மூதாட்டி வேம்பு மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வேம்பு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, அக்கம் பக்கத்தினர் பேரளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரளம் காவல்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேம்புவின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பேரளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் கம்பி அறுந்து விழும் நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு தெரிவித்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.