செங்கல்பட்டு, ஏப். 23 –

செங்கல்பட்டு பார்த்தசாரதி தெருவில் உள்ள செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே மர்மமான முறையில் தலையில் கல்லை போட்டு எலக்ட்ரீசியன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் 45 வயதுடைய பார்த்திபன் என்பதும் மேலும் அவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்பதும் மேலும் அவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருவதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பார்த்திபன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் மேலும் அதனைத்தொடர்ந்து நாள்தோறும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதும், மேலும் அவர் பார்த்தசாரதி தெருவில் உள்ள ரஹ்மான் ஷெரிப் என்பவரது வீட்டின் வாசலில் மது அருந்தி விட்டு உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் காவல்துறையினரின் தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்பவர்கள் அவ்வழியாக சென்ற போது பார்த்திபன் தலையில் ரத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதனைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகர காவல் நிலைய காவல்துறையினர் உயிரிழந்த பார்த்திபனின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து அச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது கொலையா இல்லை வேறேதும் காரணமா மேலும் கொலை எனில் கொலைக்கான காரணம் என்ன, மேலும் அக்கொலையினை செய்த மர்ம நபர் யார் என்பது போன்ற பல்வேறு கோணங்களில் துரிதமான முறையில் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here