கும்பகோணம், ஏப். 28 –

கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரை நாய் கடித்த்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், திருச்சி பிரதான சாலையை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அமர்நாத் (18). இவரது பெற்றோர்கள் உயிரழந்தக் காரணத்தால் தற்போது அமர்நாத் கும்பகோணம், முத்துபிள்ளைமண்டபம், கணேஷ் நகரிலுள்ள அவரது சித்தப்பா குமார் வீட்டில் தங்கி, சாக்கோட்டையிலுள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1 மாத்ததிற்கு முன், அமர்நாத்தை, அப்பகுதியிலுள்ள தெருநாய் கடித்துள்ளது. அதன் பின்னர் ஜெயங்கொண்டத்திற்கு சென்று, நாய் கடித்ததை பற்றி யாரிடம் தெரிவிக்காமல், விருந்து ஒன்றில், மாமிசம் சாப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று கடந்த 27-ம் தேதி, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமர்நாத்  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரழந்தார். இது குறித்து நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில், குமார் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here