சீர்காழி, மே. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

சீர்காழி அருகேவுள்ள வருசபத்து கிராமத்தில் மதுபானம் அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் மது அருந்திய மதுபான பாட்டில்களை சேகரித்து காவல்துறையினர் மதுபானத்துடன் ஏதேனும் கலந்து குடித்தார்களா என்பது போன்ற கோணங்களிலும் விசாரணை.மேற் கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வருஷபத்து கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் இவர் வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி  இரவு  அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கி பாதி குடித்த பிறகு அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

மேலும் அங்கு இருந்த தனது மைத்துனர் மணிகண்டனுடன் மீதி இருந்த மதுவை அருந்தியுள்ளார். மது அருந்திய பிறகு இருவருக்கும் ஒருவர் பின் ஒருவராக பேதி மயக்கம் ஏற்பட்டு அவரது வீட்டிலேயே மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

அதனைப் பார்த்து அவரது உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை கணேஷ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் அவர் அருந்திய மதுபானம் பாட்டிலை கைப்பற்றி மற்றும் மதுவில் ஏதேனும் கலந்து குடித்தார்களா ? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here