நன்னிலத்தில் நடைப்பெற்ற முன்னாள் எம்.பி. டாக்டர் கோபால் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வந்த சட்டமன்ற எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
திருவாரூர், ஜூன். 10 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான டாக்டர் கோபால் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான இரா.காமராஜ் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இத்திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவாரூர் மாவட்டம் வந்தடைந்த எடப்பாடி கே. பழனிச்சாமி க்கு மாவட்ட எல்லையான கொல்லுமாங்குடியில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.