திருவள்ளூர், ஏப். 16 –

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களின் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம். மகேந்திரன் அதிமுக தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக மகேந்திரனனை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இவ்வறிவிப்பினால், எல்லாபுரம் பகுதி அதிமுக தொண்டர்ள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இம்மகிழ்ச்சியினை கொண்டாடும் விதமாக புதிதாக ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.மகேந்திரன் வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து அவருக்கு அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, நாகப்பன், ராமதாஸ், ஜெகதீசன்  பாலாஜி மீன் ரவி, ராஜா, நாதன், ஹரி, பாஸ்டர் பால் ரகு, புஷ்பராஜ் உள்ளிட்டோர்  மகேந்திரனுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here