மன்னார்குடி, பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ..

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பந்தலடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அதிமுகவுக்கு இருக்கின்ற வரலாற்றை போல உலகில் வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய வரலாறு இருக்க முடியாது என பெருமிதம் கொண்டார். மேலும் அண்ணா திமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனவும் அதை எங்களால் உறுதி செய்ய முடியும். ஏனென்றால், உறுப்பினர்களை சேர்த்தவர்களே நாங்கள்தான் எனவும், மேலும் அதிமுகவில் இணைவதற்கு தொண்டர்கள் தானாகவே வந்து தங்களை இணைத்துக் கொள்கின்றனர் எனவும், மேலும் அதிமுக நீடித்து நிலைத்து இருக்கிறது என்றார்.

மேலும் கல்யாணத்திற்கு சென்றாலும் காதணி விழாவிற்கு சென்றாலும் எடப்படியார் எப்போது ஆட்சிக்கு வருவார் என்ற ஒரே பேச்சாக தான் இருக்கிறது எனவும் அடுத்தது அதிமுக தான் ஆட்சிக்கு வரும் எனவும், மேலும் திமுகவைப் போல் ஆட்சிக்கு வந்தவுடனே ஆடுவதும் ஆட்சி இல்லையென்றால் ஓடுவதாக அதிமுக இல்லையென பொதுமக்கள் பேசிகின்றனர். என்றார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை தருகிறோம் என தேர்தல் வாக்குறுதிகளை திமுக கூறியது அதை திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பக்கத்து மாநிலங்களில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்து விட்டார்கள் .

அடிதட்டு மக்களை கை தூக்கி விட்ட தலைவி புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவை போல் தமிழகத்திற்கு திட்டத்தை கொடுத்தவர்கள் யார் இருக்கிறார்கள். பெண்களுக்கு ரோல் மாடல் என்றால் புரட்சித் தலைவி அம்மாதான் என்றவர் உலகத்தில் எந்த மூலையில் பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் முதல் குரலை கொடுக்கக் கூடிய தலைவி புரட்சித்தலைவி அம்மாதான் என்றார்.

அதிமுக ஆண்ட பத்து ஆண்டுகளில் மொத்தமே ரூ 3 . 1/2லட்சம் கோடி கடன் வாங்கி மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றினோம் ஆனால் திமுகவோ ஆட்சிக்கு வந்த 32 மாதங்களிலே ரூ 3 . 1/2 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது ஆனால் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் திட்டங்களை மக்களுக்கு செய்து விட்டோம் என கூறுகிறார்கள் . திமுகவை போல ஆட்சிக்கு வருகின்றபோது ஆடுவதும் ஆட்சி இல்லாத போது ஓடுவதுமாக இருக்கிற இயக்கமாக அதிமுக கிடையாது எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான நிலையான இயக்கம் அதிமுக கழகம் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார் . ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் , தமிழ் கண்ணன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் உள்ளிட்ட இளம்பெண் , இளம்பாசறை , தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட நகர , ஒன்றிய கழக நிர்வாகிகள் இருந்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here