கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சோழன் மாளிகை தெற்கு தெருவில் எழந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஷண்முகர் சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நடைபெற்று.
முன்னதாக அவ்விழாவிற்காக கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இன்று 2 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமவாசிகள் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளிட்டோர் சிறப்பாக செய்துள்ளனர்.