கும்பகோணம், பிப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அப்புக்குட்டி தெருவில்  எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்த மாரியம்மன் ஆலயத்தில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் அம் மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சரஸ்வதி, ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது, தொடர்ந்து 21ஆம் தேதி புதன் கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து இன்று 22 ஆம்  தேதி வியாழக்கிழமை 4 ஆம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, மூலவர் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்து விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம், சிறப்பாக நடைபெற்றது, பிறகு, மூலவர் ஸ்ரீ ஆனந்த மாரியம்மனுக்கு  மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.மேலும்  நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார், மற்றும் ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தெருவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here