தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனமுருகி சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.