திருவாரூர், அக். 10 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள புத்தகலூர் காலனி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மகன் திவாகர் (வயது 19). இவர் டாட்டா ஏசி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அச்சிறுமியை வெளியூர் அழைத்து சென்று மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது
இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞனை போலீசார் தேடிவந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அத்தகவலைத் தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்ற போலீஸார் இருவரையும் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து இளைஞர் திவாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திவாகரனை கைது செய்துள்ளனர்.