திருவாரூர், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர் ஆன்மீக ஊர்வலத்தினை மேற்கொண்டு, திருவாரூர் கீழ வீதி மேலவீதி வடக்கு உள்ளிட்ட நான்கு வீதிகள் வழியாக வந்து திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வந்து நிறைவு செய்தனர்.
மேலும் ஊர்வலத்தில் கரகாட்டம், பரமசிவன் பார்வதி, மாரியம்மன், காளி, கருப்பசாமி, ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களின் வேடமனிந்து நாட்டிய நிகழ்ச்சி நான்கு வீதிகளிலும் கோயிலின் உள்புறம் அமைக்கப்பட்ட மேடையிலும் நாட்டிய நிகழ்ச்சி நடனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதில் சுவாமி தயானந்தா சரஸ்வதி கல்லூரிகளின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், கல்வியாளர் கே எஸ் எஸ் தியாகப்பாரி, மூத்த பத்திரிக்கையாளர் ஜெயபால், தொழிலதிபர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிர்வாகிகள் மகளிர் அணியினர் என திரளானவர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.