கும்பகோணம், செப். 19 –

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி சார்பில் இந்து மதத்தையும் இந்துக்களை பற்றியும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இழிவாக பேசியதாகக்கூறி அதனைக் கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிஜேபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் பகுதியாக தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி பொறுப்பாளர் வேதாஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சதீஷ் வழக்கறிஞர் அணி மாவட்ட பார்வையாளர் சுரேஷ் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் முன்னாள் நகர தலைவர் கல்கண்டு ரங்கராஜன் மாநகர பொதுச்செயலாளர் சரவணன் இந்து முன்னணி நகர துணை தலைவர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இந்து முன்னணியினர் கலந்துகொண்டு ஆ.ராசாவிற்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here