திருவாரூர், ஏப். 12 –

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும், அவ்வார்ப்பாட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் மேலும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூராக பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாட்டினைக்  கண்டிக்கும் வகையிலும் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறுவதாக அவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும் இவ் ஆர்ப்பாட்டம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமையில்  நடைபெற்றது.

மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த திரளான தொண்டர்கள் பங்கேற்று தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிரான கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here