மயிலாடுதுறை, பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுதறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக மீனவர் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். நகரத் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடிக்கின்ற உரிமையையும் சீர்குலைக்கின்ற இலங்கை அரசின் அடாவடித்தனத்தை கண்டிக்க தவறிய மத்திய அரசை கண்டித்து உரக்க முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here