கும்பகோணம், நவ. 17 –

கும்பகோணத்தில் மகாவீர் நகரை சேர்ந்தவர் செந்தில் இராட்டை பிரிவு மகன் யோகேஸ்வரன் (25). இவரது  நண்பர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த குருபிரசாத் மகன் நந்தகுமார் (22). இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு இருவரும்  பெரிய கடைத்தெருவில் தங்களது லேப்டாப்பை சர்வீஸ் சென்டரில் குடுத்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். சபரி நகர் அருகே வரும் போது, 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை வழிமறித்தது , கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக யோகேஸ்வரன் போராடி உள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் விரட்டி அந்தக் கும்பல் யோகேஸ்வரனை 8 இடங்களில் வெட்டியுள்ளனர். அவருடன் சென்ற நந்தகுமாரையும் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடோடி வந்து மீட்டு,  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இத் தகவலறிந்து 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) மோகன் தாஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக  தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியில் நடந்த தகராறு காரணத்தால் முன்விரோதம் கொண்டு இந்த சம்பவம் நடந்திருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here