உடல் தீயில் எரிந்து கருகிய நிலையில் முட் புதருக்குள் கிடந்த ஆண் சடலம் - கூடுவாஞ்சேரி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை ..

செங்கல்பட்டு, மே. 17 –

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள மாடம்பாக்கம் –  ஆதனூர் செல்லும் மேம்பாலத்தின் கீழுள்ள முள் புதரில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக கிடைப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், எரிந்த நிலையில் கிடந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உடல் கருகி எரிந்த நிலையில் கிடந்தவர் கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த குட்டி  வயது (65) என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனக்குத்தானே உடலில் தீ வைத்து கொளுத்திக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது இவரை கொலை செய்து தீ வைத்து எரித்தனரா ? என்பது போன்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

கூடுவாஞ்சேரியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கைபற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here