தஞ்சாவூர், ஏப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை பெரியக்கோவிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என திரளானவர்கள் தினசரி வந்து செல்வது வழக்கமாகும.

இந்நிலையில் தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் பக்தர்கள் மேலும் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில பல மணி நேரம் காத்து இருந்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து சென்றனர். அதனால் கோவில் வளாகம் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here