சீர்காழி, மே. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு இருசக்கர வாகனங்கள் அவ்விபத்தில் சேதமடைந்துள்ளது.

சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியில் காரைக்கால் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சூரக்காடு பகுதியில் இருந்து சீர்காழி நோக்கி வந்துக் கொண்டிருந்த லோடு ஆட்டோ ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வலது புறத்தில் இருந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடைக்குள் புகுந்தது.

அதில் கடையின் முன்புற செட் உடைந்து விழுந்தது..மேலும் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் நடேசன் என்பவர் மீதும் மோதி, பின்பு சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாது. அதில் காயம் அடைந்த நடேசனை மீட்டு அருகில் இருந்தவர்வர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவ்விபத்தில் கடையில் நிறுத்தி இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் லேசான சேதம் அடைந்தது. மேலும் அவ்விபத்து குறித்து சீர்காழி போலீசார் நேரில் சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here