கும்பகோணம்,மே. 24 –

கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின்  தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகிளா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ்அப் பில் பேசி ஆடியோ வெளியிட்டிருப்பதும், மேலும் கும்பகோணம் மேயர் உள்ளிட்ட 4 பேர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக குற்றிட்டுள்ள செய்தி இன்று கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் மகிளா காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவியாக சுபா என்பவரை நியமித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த பட்டீஸ்வரத்தை சேர்ந்த மீனாட்சி என்பவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதனை விமர்சனம் செய்து  சமூக வலைதளங்களில் ஆடியோ பதிவு ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் லோகநாதனுக்கு ஆதரவாக மேயர் சரவணன் நகர காங்கிரஸ் தலைவர் மிர்சாவுதின் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன் கும்பகோணம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சசிகுமார் உள்ளிட்ட நால்வர் பட்டீஸ்வரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விட்டதாக மீனாட்சி  பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இப்புகார் குறித்த செய்தி இன்று கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. இதன் உண்மை நிலைக்குறித்து போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்பே தெரிய வரும் என நம்ப தகந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here