குன்றத்தூர், மார்ச். 31 –
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் 38 வயதுடைய அஸ்வினி, மேலும் இவர் குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது அழகுநிலையத்திற்கு வந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர், பேசியல் உள்ளிட்ட பல்வேறு முக அலங்காரம் செய்து கொண்டு, அவ்வழகு நிலைய உரிமையாளர் அஸ்வினியிடம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிவுள்ளார். இந்நிலையில் அவர் சென்ற சிறிது நேரத்தில் அஸ்வினி வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் அவர் அப்பர்ஸை அழகுநிலையம் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், அவருக்கு சிறிதாக ஒரு சந்தேகம் எழ அழகுநிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது முக அலங்காரம் செய்துவிட்டு போன அப்பெண் அவரின் பர்சை திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும் அதுக்குறித்து உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அப்புகாரில் ரூ.15 ஆயிரம், ஏ.டி.எம், கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அப்பர்சில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இப்புகார் தொடர்பாக குன்றத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அழகு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, அப்பர்சை திருடிச்சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.