தஞ்சாவூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன்பு திமுக மகளிர் அணி சார்பில் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மகளிர் ஆணைய பொறுப்பில் இருந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு என்று கூறி உரிமை தொகை பெறும் பெண்களை இழிவுப்படுத்திய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும் கொண்டையில் தாழம்பு என்ற குஷ்பு பட பாடலை பாடிய மகளிர் அணி பெண்கள கூடையில் என்ன பூ செருப்பு என கிண்டலடித்து பாடினர்.