கும்பகோணம், ஜூன். 03 –
கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், அமைந்துள்ள கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






















