மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் “துணிவு மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள். மத்திய ரிசர்வ் காவல் படை, வீரத்திற்கும், தொழில் திறனுக்கும் பெயர் பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் இந்தப்படை முக்கிய பங்காற்றுகிறது. தேச ஒற்றுமைக்காக ஆற்றும் பணியும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.