சென்னை, டிச. 29 –

இந்தியாவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கோவிட் – 19 ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேரிடம் கண்டறியப்பட்டுளதாகவும் அதில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியோர் 241 எனவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 781 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 167 பேருக்கும், தில்லியில் 238 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 72 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 16 பேர். எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here