திருக்கச்சூர், சனவரி. 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்…  

நேற்று முழுவதும் அரசு, தனியார், கல்வி, தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினராலும் இந்தியாவின் 75 வது குடியரசு தின நாளில் நமது நாட்டின் தேசியக்கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கச்சூர் அருகே அமைந்துள்ள அரசு பள்ளியில் நம் நாட்டின் 75 வது குடியரசு தின விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக கொண்டாடப் பட்டது. மேலும் அவ்விழாவில் நமது தேசிய கொடியை பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய மாநில வன்னியர்  சங்க செயலாளருமான திருக்கச்சூர் கி.ஆறுமுகம் ஏற்றி வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நோட்டு புத்தகங்கள் வழங்கியும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்

மேலும் இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் ஜெ.ஹரி, பொருளாளர் பெருமாள், ஏழுமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பலர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here