செங்கல்பட்டு, மார்ச். 30 –

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகேவுள்ள இரும்புலியூர் பகுதியில் கடந்த 2010- ஆம் ஆண்டு 17-வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புதுக்கோட்டையை சேர்ந்த செல்லபாண்டி என்பவர் மீதான வழக்கில் குற்றவாளிக்கு 7-ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவுள்ளது.

இரும்புலியூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் 36 வயதுடைய செல்லப்பாண்டி என்பவர், மேலும் இவர் அப்பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் அச்சிறுமியின் தந்தை தாம்பரம் காவல் நிலையத்தில் தனது மகளை செல்லப்பாண்டி கடத்திச் சென்று விட்டதாக அளித்த புகாரின் பேரில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவ்வழக்கு, செங்கல்பட்டு மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார். மேலும், செல்லப்பாண்டி மீது சுமர்த்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதால் அவருக்கு 7-ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து மகிலா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here