திருவாரூர், ஜூலை. 25 –
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அங்காளம்மன் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 5ம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது. அத்திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவ்வூர்வலத்தில் கலந்துக்கொண்ட பக்தர்கள் பால்குடத்தை தலையில் சுமந்துக் கொண்டு வலங்கைமான் கடைவீதியில் தொடங்கி அனைத்து வீதிகளையும் வலம் வந்து கோயிலை அடைந்தனர்.
இவ்விழாவினை பாமக மாநில செயற்குழு உறுப்பினர் வேணு. பாஸ்கரன் துவக்கி வைத்தார். உடன் வலங்கைமான் தொழிலதிபர் ஆர். எஸ். செல்வம் வலங்கைமான் பேரூராட்சி தலைவர் சிவனேசன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் உலகநாதன் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் பழனி இளைஞரணி மாநில துணை செயலாளர் சண்முகவேல் மற்றும் ஒன்றிய செயலாளர் அப்பு ஆகியோர் இருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பாமக வின் நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ வேண்டி பாமக கட்சி தொண்டர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்துக்கொண்டனர்.