கும்பகோணம், ஏப். 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..

அரசு போக்குவரத்து கழக பேருந்து 25 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

மேலும் அப் பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும்,  நடத்துனராக செந்தில்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அரசு பேருந்து பழைய பாலக்கரை அருகே வந்த போது போக்குவரத்து நெரிசலால் நின்றது. அப்போது, 10 பேர் கொண்ட கும்பல், அந்தப் பேருந்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்துவுள்ளனர்.

அதற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்து எடுக்க வாய்ப்பு இல்லை என அப்பேருந்தின் ஓட்டுநர் அப்போது அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தாக்கி அப்பேருந்தில் இருந்த ஓட்டுநரை காலால் எட்டி உதைத்து கீழை தள்ளி தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டனர். அதில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை அருகில் உள்ளவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் அவ்வழியாக வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை 10 பேர் சேர்ந்த கும்பல் அடித்துக் கொண்டிருந்த போது அதைப் படம் பிடித்த போது, செய்தியாளர்களையும் தாக்கி உள்ளனர். அதில் காயமடைந்த செய்தியாளர்கள் புற நோயாளியாக  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

அதுக் குறித்து தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல்துறையினர்,  காமராஜ் நகரைச் சேர்ந்த சரவணன், மகன் சுதர்சன் (24), சரவணன் மகன் உதயகுமார் (25), பாலாஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் குமரன் மகன் ஜனார்த்தனன் (20), பாலக்கரையை சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here