சென்னை, ஜன. 10 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, பதக்கங்களை வென்ற 13 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சந்தித்து, முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர். அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.