மீஞ்சூர், ஏப். 13 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லூர் ஊராட்சியில் என்.டி.சி.எல் தொழிற்சாலையின் சார்பில் கிராம வளர்ச்சி நிதியின் கீழ்  1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் .அதே பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும் கல்வெட்டுக்கள் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே .ரமேஷ்ராஜ். தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி .ரவி. ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார். துணைத் தலைவர் இலக்கியா ராயல் .வல்லூர் தமிழரசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒப்பந்ததாரர்கள் தடப்பெரும்பாக்கம் ஈஸ்வரிராஜா.ஆவூர்அருள். உள்ளிட்டோரும் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும்  திரளாக வருகைப்புரிந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here