தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நீர் வளத்துறை ஆய்வுக்கூட்டம்  நேற்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அலுவலர்களுக்கு நீர் ஆதாரங்களை அதிகரிக்கவும் புதிய நீர் நிலைகளை உருவாக்கிடவும் , மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேபிப்புக் கட்டுமானங்கள் அமைத்திடவும் அறிவுறுத்தினார்.

சென்னை,ஜூலை 25-

முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற்ற நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டத்தில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற் கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உள்ள திட்டங்கள் ஆகியவைக் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து,தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வதோடு புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும் மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களைக் குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என அறிவுறுத்தினர் .

மாநில நிதி பணிகளான காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்ட சிறப்பு தூர் வாரும் பணிகள், அத்திக்கடவு அவினாசி நீர் பாசனம், நிலத்தடி நீர்செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் மேட்டுர் சரபங்கா நீரேற்றுத்திட்டம் காட்டூர் தத்தமஞ்சு ஏரிகளின் கொள் அளவினை மேம்படுத்தி நீர்தேக்கம் அமைக்கும் திட்டம்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கழுவேலி ஏரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரிகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு மேற் கொண்ட முதலமைச்சர் நபார்டு நிதியுதவியுடன் புதிய தடுப்பணைகளை கட்டுதல், அணைக்கட்டுகள் மற்றும் நீர்நிலைகளைப் புனரமைப்புச் செய்தல் செப்பனிடுதல் புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைப்பெறும் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல் படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் மற்றும் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும், ந்திநீர் இணைப்புத்திட்டங்களான காவேரி குண்டாறுஇணைப்புத்திட்டம், தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் நொய்யல் உப வடிநிலம் புதிய கட்டளைக் கால்வாய் இராஜவாய்க்கால், கீஈழ்பவானித் திட்டம், கல்லணைக் கால்வாய், காவேரி உப வடிநிலம் ஆகியவற்றில் நடைப்பெறும் புனரமைப்பு திட்டங்கள் முக்கொம்பு மேலணை, ஆதனூர் குமாரமங்கலம் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும்,  நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும் விவசாயிகளின் நலன் கருதி பல ஆண்டுகளாக சீரமைக்கப் படாமல் இருக்கும் நீர்நிலைகளை செப்பனிடவும், கால்வாய்களைச் சரி செய்யவும் முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து மேற் கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன், தலைமைச்செயலாளர் முனைவர் இறையன்பு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷணன், பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளர் ரவீந்திரபாபு, நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் இராம மூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here