பாபநாசம், மே. 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த  கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சக்தி சினிமாஸ் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் அப் படத்தின் நிறைவு நாள் காட்சியில் நேற்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின்  மத்திய மாவட்ட தலைவரும் ,தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளருமான இரா விஜய் சரவணன் வருகை புரிந்தார் மேலும் அப்போது அத்திரைப் படத்தினை மறுவெளியீடு செய்த பாபநாசம் சக்தி சினிமாஸ் தியேட்டர் மற்றும் சக்தி ஃபிலிம் பேக்டரி உரிமையாளருமான பி சக்திவேலனுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக விஜய் சரவணனுக்கு திரையரங்க மேனேஜர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து அவரை வரவேற்றார். பின்னர் மேலாளருக்கு விஜய் சரவணன் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

கில்லி திரைப்படத்தினை மாவட்ட நிர்வாகிகளும் ஒன்றிய நிர்வாகிகளும் ரசிகருடன் அமர்ந்து திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர்   இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் நிஜாம் மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் தஞ்சை நகர தலைவர் பாரி தஞ்சை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் பாபநாசம் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜா பாபநாசம் நகர தலைவர் சூர்யா மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

 

முன்னதாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி சோழக்கதிர் வழங்கப்பட்டது .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here