பாபநாசம், மார்ச். 10 –
திருவாரூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வலங்கைமான் அருகேவுள்ள சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர், வலங்கைமானில் உள்ள நர்சரி கார்டனில் வைக்கப்படிருந்த தென்னங்கன்றுகளில் 42 எண்ணிக்கையிலான தென்னங்கன்றுகளை இரவோடு இரவாக திருடி அதனை காரில் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வலங்கைமான் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியாக வந்த சூர்யாவை விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவல் நிலையித்திற்கு அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் நர்சரிகார்டனில் இருந்து 42 தென்னங்கன்றுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இத்திருட்டு குறித்து நர்சரி கார்டன் சார்பில் வலங்கைமான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.