காஞ்சிபுரம், ஜூன். 24 –

ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் புதிய திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது வட மாநிலங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்திலும் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார்தூண் பகுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கினால் இளைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும், எனவே ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் புதியதிட்டத்தை திரும் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இல்லை என்றால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடையும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here