கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் அருகே இன்று அதிகாலை எதிரெதிரே வந்த சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
கும்பகோணம், டிச. 12 –
சுவாமிமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் கிராம முக்கிய சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏஸ் வாகனமும் சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் டாடா ஏஸ் வாகன ஓட்டுனர் ரமேஷ் (26) மற்றும் இவ்வாகனத்தில் பயணம் செய்த மணிகண்டன் (20) ஆகிய இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் தப்பிய சுற்றுலா வாகன ஓட்டுனர் தலைமறைவு ஆகிவிட்டார். விபத்தில் இறந்த இருவரது உடல்களும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.