காஞ்சிபுரம், ஜூன். 16 –

மறைந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தியாகி விஸ்வநாததாஸ் 137வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமுதாய நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமுதாய நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் செயலாளர் G. சேகர் தலைமையில் மாவட்ட தலைவர் S. ஏழுமலை முன்னிலையில்  நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு தியாகி விஸ்வநாத தாஸின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ சமுதாய நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாநிலத் துணைத் தலைவர் ராஜா,காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் குமார்,துணைத் தலைவர் கோவிந்தராஜ், மற்றும் நிர்வாகிகள் பச்சையப்பன்,நித்யானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here