கும்பகோணம், ஆக. 21 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது, இன்று 3ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் அப்பகுதி மட்டுமல்லாது அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர்வாசிகள், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here